Wednesday, November 15, 2006

<<>>அகம்திறந்த சுகம்....2<<>>

'இமயச் சிகரங்கள் தேவர்களின் ஆன்மாக்கள்,' என்கிறான் காளிதாசன். மேலிருந்து பார்த்தால், பாரதத்தின் பிரும்மாண்டமான அறவில்லாகப் படுத்திருக்கிறது இமயம். பூமித்தாய் களைப்பு மேலிட்டு உடம்பை முறுக்கிச் சொடக்குவிடப் புடைத்தனவே மலைத்தொடர்கள். இமயமும் அப்படித்தான். இமயம் இளைய மலைதான், திருவண்ணாமலையைக் காட்டிலும் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம், ஒருகாலத்தில் கடலாயிருந்த பகுதிதான் தற்போது இமயமாய் நெடிதுயர்ந்து நிற்கிறது. மிக உயரமான பகுதிகளில், கடல்வாழ் பிராணிகளின் எலும்புகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தியாவுக்கு இமயம் அரண். அது இல்லையென்றால் இந்தியா பனிப்பாலைவனமாகியிருக்கும். இமயம் பாறைகளாலான மலையல்ல! பெரும்பாலும் மண்தான்.


காடுகளை அழிப்பதும், வேட்டுவைத்துச் சாலைகள் அமைப்பதுமே நிலச்சரிவுகளுக்குக் காரணம். இந்தியனுக்கு இமயம் வெறும் மலையன்று. இறையுறையும் திருக்கோவில். ஆன்மீகத் தலைவாசல். ஞானப் பாசறை. யோகத்தின் கொட்டடி. பக்திக்குத் தொட்டில். நாகரிகம், மனித நேயம் இவற்றின் ஊற்று. எழிற்கொள்ளை. கற்பனைகளின் களஞ்சியம். கவிதைக்குச் சவால். அந்தரங்கத்தின் பகிரங்கம். ரகசியங்களின் கருவூலம். உருவாய்த் தோன்றும் அருவத்தின் ஜாலம். நில்லாமல் நகரரமல் நிகழ்கின்ற கூத்து. நிசம் என்று நாம் போர்த்திக்கொண்ட பிரமைகளைத் தாக்கி நிர்மூலமாக்கி நின்று சிரிக்கும் பிரமிப்பின் உச்சம். கம்பீரத்தின் முழுவடிவம். கடவுள் வியக்கும் அழகு. ஆ! உள்ளே ஏதோ கொஞ்சம் தமிழிருப்பதால் இவ்வளவேனும் சொன்னேன்!

இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள்புரியும். என் குருவின் திருவருளால், 1994 லிருந்து இன்றுவரை 13 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறெனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறை திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு உயிரையெல்லாம் தனதாக்கி என்ணமெல்லாம் தன்வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்! நான் பலரோடும் சென்றபோதும் தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என்குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்க முடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். \'தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா,\' என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம்திறந்த சுகம் கண்டிருக்கிறேன். பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில், ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்த போது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும், ஒன்று கூட என்னைத் தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன். பாதையற்ற மலைச்சரிவொன்றில் இறங்கும் போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டதுபோல் அந்தரத்தில் நிற்க, கீழெ சுருண்டு கிடந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன். ஒரு மின்மினிப் பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்ததுபோல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் காளிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன். புத்தகங்களில் ஆஹா ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் என்னாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன். \n தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்? ",]

இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள்புரியும். என் குருவின் திருவருளால், 1994 லிருந்து இன்றுவரை 13 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறெனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறை திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு உயிரையெல்லாம் தனதாக்கி என்ணமெல்லாம் தன்வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்! நான் பலரோடும் சென்றபோதும் தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என்குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்க முடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். 'தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா,' என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம்திறந்த சுகம் கண்டிருக்கிறேன். பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில், ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்த போது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும், ஒன்று கூட என்னைத் தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன். பாதையற்ற மலைச்சரிவொன்றில் இறங்கும் போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டதுபோல் அந்தரத்தில் நிற்க, கீழெ சுருண்டு கிடந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன். ஒரு மின்மினிப் பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்ததுபோல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் காளிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன். புத்தகங்களில் ஆஹா ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் என்னாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன். தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்?

சரி, மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன்.. எனக்கு வேறு பாஷை தெரியாது.. வீதி நாடகத்தில் ஏது மேடைக்கூச்சம்??!! ரமணன். கங்கைக் கரையில் நிற்கிறேன். தவத்தில் எழுந்த நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதைபோலே, கட்டறுந்து விரைகிறாள் கங்கை! காணக்காண, உள்ளச் சிமிழ் உடைந்து வெள்ளமென எண்ணங்கள் விம்மி வருகின்றன. நதி, பெண்தான், ஐயமே இல்லை. இந்த நளினமும், ஓயாமல் கறையைக் கழுவி, ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும் கருணையும், சுமையைச் சுவையாய்க் கருதும் தயையும், மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத பேரழகும், இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத் தவிர யாருக்குண்டு? \n கங்கை என் தாய், என்னைக் கழுவும்போது. என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப் பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது. குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு. குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க வேண்டும். இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப் போடவேண்டும். கங்கை முக்திக்கு, வினை இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள். 'கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும் முக்தி பெறுமோ?' என்று வினவுகிறார் கபீர்தாஸ். பெறாதுதான்! முழுக்குப் போட்டால்தான் முக்தி!


இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன். இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக என்று முழுக்குப் போடவேண்டும். அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும். \n சரி, பாவம் எது? ஊட்டிய கரத்தைக் கடிப்பது, நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது, கையில் பொருளிருக்கக் கை நீட்டிய ஏழைக்குக் கஞ்சிகூட வார்க்காமல் விரட்டுவது, பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே! இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழுமனிதனாய் எழுந்து கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு! காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள். கரையருகே கைவீசுகிறாள்.

நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள். பலப்பல மகத்தான நாகரிகங்கலின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனத்தில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்டபோது காது குளிரக் கேட்டவள். சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள். சீதையின் பாதம்பட்டுச் சிலிர்த்தவள். இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகின்றவள். மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

சரி, மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன்.. எனக்கு வேறு பாஷை தெரியாது.. வீதி நாடகத்தில் ஏது மேடைக்கூச்சம்??!!
ரமணன்

No comments: